பதிவு செய்த நாள்
19
ஆக
2022
12:08
அனுப்பர்பாளையம்: திருப்பூரில் உள்ள அனைத்து லயன்ஸ் கிளப் சார்பில், அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் திருப்பூர் ஆத்துபாளையத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் மின் மயானம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தற்போது, அறக்கட்டளை சார்பில், மின் மயான வளாகத்தில் 12 லட்ச ரூபாய் மதிப்பில் மஹா கால காலேஸ்வர் சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 6:00 மணி முதல், அவிநாசி காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில், பவானி சிவனடியார் திருக்கூட்டம் தியாகராஜ குருக்கல் தலைமையில், இரண்டரை அடி உயரமுள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 7:15 மணி முதல், 9:30 மணி வரை வேள்வியாகம் செய்யப்பட்டு, பாராயணம் பாடப்பட்டது. தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமார், மின் மயான அறக்கட்டளை சேர்மன் செல்வராஜ், தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, துணை தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் மயில்சாமி, பொருளாளர் ஜீவானந்தம், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரகுபதி, பாலாஜி மற்றும் அனைத்து லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், பொது மக்கள் என நூற்று மேற்பட்டோர் கலந்து கொண்டு சிவனை தர்சித்தனர். விழா முடிவில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மின் மயான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.