காஞ்சிபுரம்: கிருஷ்ண ஜெயந்தி விழாவை யொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில்கள் புதுப் பொலிவு பெற்றுள்ளன
நாடு முழுதும், கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காஞ்சி புரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில்கள் வர்ணம் தீட்டுவது, அலங்கார பந்தல் அமைப்பது, வாழை மரம் தோரணம் கட்டுவது உள்ளிட்ட பணி முடிந்து இன்று காலை 10:00 மணிக்கு உற்சவர் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடு களை, திருப்பணி குழு மற்றும் கிராம மக்கள் செய்து உள்ளனர்.