மதுரை: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முகூர்த்த கால் ஊன்றும் விழா நடந்தது. கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை முடிந்து, வளாகத்தில் மூர்த்த கால் நடப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள், எழுத்தர் இதயராஜன் கலந்து கொண்டனர். ஆக. 26 காலை 8:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், அன்று முதல் ஆக. 29 வரை மாலை 6:30 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. ஆக. 30 காலை மஹா கணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை, மாலை ஆறு மணிக்கு உற்சவர் மூஷிக வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது.