சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டியில் நூறு ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் இருந்தது. இக்கோயில் பழமை அடைந்ததன் காரணமாக பொதுமக்கள் சார்பாக இடிக்கப்பட்டு புதியதாக கோவில் கட்ட திருப்பணிகள் தொடங்குவதற்கான வாஸ்து பூஜை மற்றும் பாலாலய பூஜை நடந்தது. பின் பூஜைகள் செய்யப்பட்டு பாலக்கால் உண்ட பட்டது. பின் கோயில் கட்டட திருப்பணிகள் தொடங்கப்பட்டது.இதில் கோயில் நிர்வாகிகள் பாலன், பூசாரிகள் செந்தில்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.