உடுமலை: செல்லப்பம்பாளையம் காசி பானலிங்கேஸ்வரர் கோவிலில், வாஸ்து நாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.உடுமலை அருகே செல்லப்பம்பாளையத்தில், சன்மத பீடம் அமைந்துள்ளது. இங்குள்ள காசி பான லிங்கேஸ்வரர் கோவிலில், வாஸ்து நாளையொட்டி, நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வாஸ்து பகவானுக்கு, சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், செல்லப்பம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.