பதிவு செய்த நாள்
24
ஆக
2022
08:08
திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில், நேற்று சுவாமி சண்முகர், தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் காட்சியளித்தார்.
திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, நேற்று ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 2:30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந் தது. அதிகாலை 5:00 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகு சேவை நிகழ்ச்சி நடந்தது.
அதனைத் தொடர்ந்து, சண்முக விலாசத்தில் காலை 9:00 மணிக்கு, சுவாமி ஆறுமுகப் பெருமானின், ஆறுமுகங்களுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் மக்களுக்கு வாழ்வில் ஏற்றம் தரும், ஏற்ற தரிசனம் அருள்பாலித்து பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது . மாலை 4:30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு பட்டு அணிந்து , சிவப்பு மாலை அணிந்து சிவப்பு சாத்தி, சிவன் அம்சத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (24ம் தேதி) 8ம் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு சுவாமி சண்முகர் ரிய ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சத்தில் வெள்ளைச் சாத்தி வீதி உலாவும், தொடர்ந்து காலை 10:30 மணிக்கு மேல், பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி விஷ்ணு அம்சத்திலும் எழுந்தருளி, வீதி உலா வந்து ளுக்கு அருள்பாலித்து கோயில் வந்து சேர்க்கையாகிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், நாளை மறுநாள் (26ம் தேதி) நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு ல் 6:30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் தேரோட்டம் துவங்குகிறது.