உசிலம்பட்டி: ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயிலில் ஆவணி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பிரதோஷ அலங்காரத்தில் ஐராவதேஷ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.