Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தசாவதாரங்களின் பொதுப்பெயர்! மந்திரம் சொல்லும்போது முடிவில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாட்டு படிச்சா பணத்தை தூக்கி எறியலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2012
02:08

மனதில் ஆசை எதையும் வளர்த்துக் கொள்ளாமல் குறிக்கோளை நோக்கி முன்னேறுபவனை வைராக்கியசாலி என்பர். துறவிகளுக்கு வைராக்கியம் மிகவும் அவசியமான குணம். இறைவனை நேரில் காண விரும்பிய ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் வைராக்கிய சாலிகளாகத் திகழ்ந்தனர். அதனால் தான், அவரால் காளிதேவியுடன் பேச முடிந்தது. வடமொழியில்  ராகம் என்றால் ஆசை. ராகத்தில் இருந்து முற்றிலும் நீங்கிய நிலை வைராக்கியம். வடநாட்டில் சந்நியாசம் பெற்ற ஆண்டிகளைபைராகி என்று குறிப்பிடுவர். வைராகி (வைராக்கியம்) என்பதே அங்கு பைராகி எனப்படுகிறது. தமிழகத்தில் உதித்த ஞானிகளில் சிறந்த வைராக்கியசாலி பட்டினத்தார். குபேரனின் அம்சமாகப் பிறந்த இவர், கடல்வாணிபம் செய்த பெரும் பணக்காரர். இவருடைய மகனாக சிவபெருமானே வந்து பிறந்தார். பணம் பெரிது என்ற இவரது அஞ்ஞானத்தைப் போக்கினார். காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று ஓலையில், இவரது மகன் எழுதிய வார்த்தை யைக் கண்டு கலங்கிப் போனார். செல்வத்தை துச்சமென தூக்கி எறிந்து விட்டு திருவோட்டுடன் புறப்பட்டார். பின், அந்த திருவோட்டை வைத்திருப்பதும் இழுக்கு என எண்ணி கீழே போட்டு உடைத்து விட்டு திருவாலங்காடு சென்றார். பட்டினத்தாரின் பாடல்களைப் படிப்பவர்கள் செல்வம் பெரிதல்ல என்ற வைராக்கியம் பெற்று பணத்தை தூக்கி எறிவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar