Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் அருகே முள் படுக்கையில் ... தேவிபட்டினம் நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா; சந்தனக்காப்பு களைந்த மரகத நடராஜருக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா; சந்தனக்காப்பு களைந்த மரகத நடராஜருக்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2026
06:01

 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களையப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. கொளுத்தும் வெயிலில் ஏழு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை காலை ( ஜன.,3) ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.


ஆதி சிவன் கோயில் என்றழைக்கப்படும் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் டிச., 25 காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 8:30 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் நடந்தது. அதன் பிறகு மரகத நடராஜருக்கு பால், பன்னீர், சந்தனம், தைலக்காப்பு, தயிர் உள்ளிட்ட 32 வகையான அபிஷேகங்கள் நடந்தன. இரவு 10:00 மணிக்கு கூத்தர் பெருமாள் கல்தேர் மண்டபத்தில் எழுந்தருளிர்கிறார். இன்று காலை 6:00 முதல் இன்று காலை 6:00 மணி வரை (24மணிநேரம்) தொடர் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. இரவு விடிய விடிய நடராஜருக்கு அபிஷேகம் நடக்கிறது.  பக்தர்கள் பொது தரிசனம் வழியில் 7 மணி நேரம், ரூ.10 டிக்கெட் வரிசையில் நின்றவர்கள் 5 மணி நேரம், ரூ.100, ரூ.250 டிக்கெட் எடுத்தவர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சந்தனம் களைந்த மரகத நடராஜரை தரிசித்தனர்.


நாளை (ஜன., 3) அதிகாலை 4:00 மணிக்கு நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் துவங்குகிறது. முடிவில் மரகத நடராஜருக்கு புதிய சந்தனகாப்பிட்டு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமாள் வீதியுலா, மாலை 5:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு மாணிக்கவாசகர் சுவாமிக்கு காட்சியளித்தல், பிறகு ரிஷப வாகனகத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


விழாத்துளிகள் :


* மரகத நடராஜர் அபிஷேகத்தை காண எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டிருந்தது.


* மரகத நடராஜருக்கு சாத்தப்பட்ட சந்தனம் என்ற பெயரில் கோயில் நிர்வாகத்தை தவிர்த்து சிலர் ரூ.100 முதல் ரூ.200க்கு சந்தனத்தை விற்றனர்.


* சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.


* சமூக அமைப்புகள், பக்தர்கள் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.


* கோயில் நுழைவுபகுதியில் இருந்து 2 கி.மீ., வரை ரோட்டோரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar