பதிவு செய்த நாள்
31
ஆக
2022
10:08
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48வது நாள் மண்டல பூஜை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நேற்று கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவஜனம், கலச பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து புனித தீர்த்தங்கள் நிறைக்கப்பட்ட குடம் மேளதாளம் முழங்க யாகசாலை மற்றும் கோவிலை சுற்றி வந்து பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிட பக்தர்கள் மற்றும் பெண்கள் குலவையிட்டு வழிபட்டனர். பின் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அய்யாபட்டி, பெருமாள்கோவில்பட்டி, சரளக்காடு, பாப்பம்பட்டி, பாப்பாத்தி அம்மன் நகர், சின்ன கோம்பைபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி, கவுன்சிலர் ஹரிஹரன், அழகு இன்டெர்லாக் பிரிக்ஸ் உரிமையாளர்கள் அழகேஸ்வரன், சுரேஷ்பாபு, அழகு அரவிந்த், விக்ரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.