பதிவு செய்த நாள்
02
செப்
2022
07:09
ஆலாந்துறை: இருட்டுப்பள்ளத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது. இருட்டுப்பள்ளத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 30ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து, முதற்கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடந்தது.
நேற்று முன் தினம் காலை, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வியும், மாலை, மூன்றாம் கால வேள்வியும் நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு நான்காம் கால வேள்வியும், மலர் வழிபாடு நடந்தது. காலை, 10:00 மணிக்கு, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் தலைமையில், விமான கோபுரங்களுக்கும், கற்பக விநாயகருக்கும் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகளார், அஜித்சைத்தன்ய சுவாமிகள், முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.