Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
களமருதூரில் மருதாம்பிகை உடனுறை ஸ்ரீ ... நாகராஜா கோவிலில் ஆவணி இறுதி ஞாயிறு வழிபாடு : பக்தர்கள் தரிசனம் நாகராஜா கோவிலில் ஆவணி இறுதி ஞாயிறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்தூர் அருகே கீரிப்பட்டி: தேர்த்திருவிழா நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2022
01:09

 ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கீரிப்பட்டி கிராமத்தில் எல்லையம்மன், மாரியம்மன், விநாயகர் கோயில்கள் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் தேர்த் திருவிழா, கடந்த, ஆகஸ்ட் 23ம் தேதி துவங்கியது. கடந்த 7-ம் தேதி மாரியம்மன் தேர் திருவிழா நடந்தது. இந்த விழாவில் தேர் மீது விழா குழுவினர் அமர்ந்து செல்வதற்கு தடை விதிக்கும்படி, ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம் தனிநபர் யாரும் தேரின் மீது ஏறக்கூடாது என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தேர் திருவிழாவும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இன்று(செப்.,10) எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா காலை 10 மணி அளவில் துவங்க இருந்த நிலையில் தேர் மீது முக்கியஸ்தர்கள் ஏறக்கூடாது என இந்து அறநிலை துறை மற்றும் போலீசார் தெரிவித்து இருந்தனர். அதை விழா குழுவினர் ஏற்க மறுத்ததால் தேர் திருவிழாவை நிறுத்திவிட்டனர். இதையடுத்து கிராம மக்கள் நிறுத்தப்பட்ட தேர்வு முன் தேங்காய் உடைத்து வைத்து பூஜை செய்து வழிபாடு செய்து சென்றனர். தொடர்ந்து கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar