Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கருமாரி அம்மன் கோயில் பூச்சொரிதல் ... சபரிமலை ஏர்போர்ட் : மண் பரிசோதனை ஆரம்பம் சபரிமலை ஏர்போர்ட் : மண் பரிசோதனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டத்தரசியம்மன் கோவில் முன் படம் எடுத்த நாகபாம்பு : பாலூற்றி வழிபட்ட மக்கள்
எழுத்தின் அளவு:
பட்டத்தரசியம்மன் கோவில் முன் படம் எடுத்த நாகபாம்பு : பாலூற்றி வழிபட்ட மக்கள்

பதிவு செய்த நாள்

20 செப்
2022
04:09

தொண்டாமுத்தூர்: தென்னமநல்லூரில், பட்டத்தரசியம்மன் கோவில் முன் வந்து படமெடுத்து நின்ற நாகப்பாம்பிற்கு பூஜை செய்து பாலூற்றி பொதுமக்கள் வழிபட்டனர்.

தென்னமநல்லூர், காந்தி காலனியில், பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், சுமார், 50 ஆண்டுகள் பழமையானது. இந்நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கோவிலின் எதிரே உள்ள மழைநீர் வடிகால் காங்கிரீட் மீது சுமார், 3½ அடி உயரமுள்ள நாக பாம்பு வந்துள்ளது. இந்நிலையில், வெகுநேரமாக, நாகப்பாம்பு அங்கிருந்து செல்லாமல் படம் எடுத்து நின்றுள்ளது. இதுகுறித்து, அப்பகுதியில், தகவல் பரவியது. இந்நிலையில், காலை, 10:00 மணி ஆகியும் பாம்பு அங்கேயே இருந்தது. கோவிலின் நேர் எதிரில், பாம்பு படம் எடுத்து நிற்பது குறித்து தகவலறிந்த பெண்கள், அங்கு கூடினர். அதன் பின், பாம்பிற்கு மஞ்சள், குங்குமம் தூவி, பால் ஊற்றி, முட்டையும் வைத்து, கற்பூரம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர். இந்நிலையில், அங்கிருந்தவர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, பகல், 12:00 மணிக்கு, சம்பவ இடத்திற்கு போளுவாம்பட்டி வனச்சரக ஊழியர்கள், நாகப்பாம்பை பத்திரமாக மீட்டு, முள்ளாங்காடு வனப்பகுதியில் விடுவித்தனர். கோவில் முன் நாகப்பாம்பு படம் எடுத்து சுமார், 7 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar