Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பட்டத்தரசியம்மன் கோவில் முன் படம் ... திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் 5 மணி நேரம் தரிசனம் ரத்து திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் 5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை ஏர்போர்ட் : மண் பரிசோதனை ஆரம்பம்
எழுத்தின் அளவு:
சபரிமலை ஏர்போர்ட் : மண் பரிசோதனை ஆரம்பம்

பதிவு செய்த நாள்

20 செப்
2022
04:09

கம்பம்: சபரிமலை அருகே எருமேலியில் விமான நிலையம் அமையவிருக்கும் இடத்தில் மண் பரிசோதனை துவங்கியுள்ளது.

கேரளாவில் கொச்சி, திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு ஆகிய ஊர்களில் விமான நிலையங்கள் உள்ளன. கம்பமெட்டு அருகே அணைக்கரை அல்லது இடுக்கியில் அமைக்க உத்தேசித்திருந்த விமான நிலைய பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அதற்கு பதில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்லும் சபரிமலை அருகே விமான நிலையம் ஒன்று அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த திட்டதை மறுபரிசீலனை செய்ய போவதாக அறிவித்தது, காரணம் தொழில் நுட்ப ரீதியாக காரணங்கள் கூறப்பட்டது. குறிப்பாக ரன்வே 2.7. கி.மீ. தூரத்திற்கு திட்டமிடப்பட்டதை காரணமாக தெரிவித்திருந்தது. இங்குள்ள கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் 3.4 கி.மீ. நீளத்திற்கும், கண்ணூர் 4 கி.மீ நீளத்திற்கும் ரன்வே உள்ளது. ஆனால் இங்கு 2.7.கி.மீ. தூரத்திற்கு அமைத்தால் எதிர்காலத்தில் மேம்பாட்டு பணிகள் செய்ய முடியாது என்றும், மத்திய அரசு அனுமதி தராது என்றும் கூறப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்திற்கான தனி அதிகாரி துளசிதாஸ் தற்போது 3.5 கி.மீ. ரன்வே அமைக்க உத்தேசித்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியதன் காரணமாக தற்போது மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. செப். 19 ல் டில்லியில் இருந்து வந்துள்ள நிபுணர்குழுவினர் மண் பரிசோதனைக்கென மண் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எட்டு இடங்களில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்திற்கு குழிகள் தோண்டி மண் சேகரிக்கப்படுகிறது. 21 நாட்களில் மண் பரிசோதனை முடிவுகள் இந்த விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கான கன்சல்டன்ட் லூயிஸ் பெர்சர் நிறுவனத்திடம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ட்ரோன் மூலமாக விமானங்கள் இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் ஏதேனும் பிரச்னைகள் இருக்குமா என்றும் சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar