Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கை மண் எடுத்து.. துர்கா பூஜைக்காக ... நவராத்திரி விழா : அக்., 5ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல் நவராத்திரி விழா : அக்., 5ல் ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: செப். 26 முதல் 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: செப். 26 முதல் 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

21 செப்
2022
07:09

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு செப்டம்பர் 23 பிரதோஷ நாள் முதல், நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். இதனையடுத்து நவராத்திரி திருவிழா வழிபாட்டிற்காக செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை மேலும் 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை நேற்று அறிவித்தது. இதன்படி தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்கவும், இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது எனவும், வனத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தாங்களே உணவு சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நவராத்திரி வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது புரட்டாசி அமாவாசை மற்றும் நவராத்திரி வழிபாட்டின் காரணமாக செப். 23 முதல் அக். 5 வரை, தொடர்ந்து 13 நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது சதுரகிரி பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக நேற்று மாலை சிவகாசியில் சப் கலெக்டர் பிரித்திவிராஜ் தலைமையில் திருவிழா முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜ், வருவாய் துறை, வனத்துறை, தீயணைப்பு துறை உட்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar