புரட்டாசி சனி : போடி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2022 04:09
போடி: புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. கொரோனா, இன்ப்ளுயன்ஸா தொற்று உள்ளிட்ட நோய்கள் பரவாமல் இருக்கும் வகையில் கருப்பு நாமம் இட்டபடி சீனிவாசப் பெருமாள் தங்க கவச மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சமூக இடைவெளியுடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருளாசி பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியர் செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
* போடி மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.