மேலுார்: அட்டப்பட்டி அய்யனார் கோயிலில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி நேற்று புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று கிராமத்து சார்பில் தும்பைபட்டியில் புரவி செய்யப்பட்டு ஏ.கோயில்பட்டி வழியாக பக்தர்கள் புரவியை கோயிலுக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று(செப்.25) கோயில் மாட்டிற்கு மரியாதை செய்யும் எருதுகட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அட்டப்பட்டி, கோயில்பட்டி மற்றும் தும்பைட்டியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.