பதிவு செய்த நாள்
27
செப்
2022
05:09
ஆரணி: ஆரணி, லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஐந்து லட்சம் தேங்காய்கள் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டையில், பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் திருமணம், குழந்தை வரம் வேண்டி, அவரவர் வேண்டுதல்படி, 108, 1,008, 5,008 தேங்காய்கள் சூறை விட்டு ஆண்டுதோறும் புரட்டாசி மாத மகாளய அமாவாசையன்று, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை, லட்சுமி நரசிம்மர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக, பூஜை நடத்தப்பட்டு, அன்றிரவு அலங்கரித்த புஷ்ப பல்லக்கில் லட்சுமி நரசிம்மர், சைதாப்பேட்டை, நாடக சாலைபேட்டை தெரு, கமண்டல நாக நதி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, பக்தர்கள், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.