Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி அண்ணன் பெருமாள் கோவிலில் ... திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் விழா திருப்பரங்குன்றத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி கோயிலில் நவராத்திரி விழா; அம்மன் அம்பு விடுதலுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
சதுரகிரி கோயிலில் நவராத்திரி விழா; அம்மன் அம்பு விடுதலுடன் நிறைவு

பதிவு செய்த நாள்

06 அக்
2022
07:10

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா, ஆனந்தவல்லி அம்மன் அம்பு விடுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையில் திரண்டு வழிபட்டனர்.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஒரே பெண் தெய்வமான ஆனந்தவல்லி அம்மனுக்காக கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவும், கடைசி நாளில் ஆனந்தவல்லி அம்மன் அம்பு எய்து மகிஷாசுர அரக்கனை அழிக்கும் நிகழ்ச்சியும் மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்வாண்டும் செப்டம்பர் 26 முதல் துவங்கிய நவராத்திரி திருவிழா விஜயதசமி நாளான நேற்று சிறப்புடன் நடந்தது. ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் வில், அம்புடன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் பெண்கள் முளைப்பாரியை கோயில் முன்வைத்து கும்மி வழிபாடு செய்தனர். பின்னர் காலை 11:00 மணிக்கு அம்மன், மகிஷாசுர அரக்கனை அழிப்பதற்காக பக்தர்கள் படையை சூழ சன்னதியை விட்டு வெளியேறினார். திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை குலவையிட்டு வரவேற்றனர். காலை 11:20 மணிக்கு கோயில் வளாகத்தின் வெளியே வாழை மர உருவில் மறைந்திருந்த மகிஷாசுர அரக்கனை அம்மன் அம்பு விட்டு அழித்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி, குலவையிட்டு ஆரவாரம் செய்தனர். பின்னர் சன்னதி திரும்பிய அம்மன் மீது பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். இரு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar