Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி மலையில் காட்டுத்தீ : ... அம்பு எய்தல் அலங்காரத்தில் அருள்பாலித்த சாமுண்டீஸ்வரி அம்மன் அம்பு எய்தல் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

07 அக்
2022
07:10

 திருப்பதி, :திருமலை ஏழுமலையானை தரிசிக்க, நேற்று பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்தனர்.திருப்பதி திருமலையில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் காலை தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. பிரம்மோற்சவ நாட்களில் ரத்து செய்யப்பட்டிருந்த அனைத்து தரிசனங்களும் நேற்று முதல் மீண்டும் துவங்கின. இதையடுத்து, திருமலையில் நேற்று காலை முதல், பக்தர்கள் கூட்டம் அலைமோதத் துவங்கியது. தர்ம தரிசனத்தில் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்தனர். திருமலையில் உள்ள 32 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் 10 கி.மீ., தொலைவு வரை பக்தர்கள் தரிசன வரிசை நீண்டது. காத்திருப்பு அறைகளில் உள்ள பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், 63 ஆயிரத்து 579 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தினர்; 34 ஆயிரத்து 524 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஏழுமலையானுக்கு இரவு 11:30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, நள்ளிரவு 12:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தர்கள், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். திருமலை மலைப்பாதை காலை 3:00 மணிக்கு திறக்கப்பட்டு, நள்ளிரவு 12:00 மணிக்கு மூடப்படுகிறது.தரிசனம், வாடகை அறை குறித்து புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் 18004254141, 93993 99399 என்ற எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar