Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அல்லாளபுரம் கோவில் மண்டல பூஜை ... பொள்ளாச்சி கோவில்களில் கந்த சஷ்டி விழா சிறப்பு வழிபாடு பொள்ளாச்சி கோவில்களில் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை சுப்பிரமணியர் கோவில்களில் கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
காரமடை சுப்பிரமணியர் கோவில்களில் கந்த சஷ்டி விழா

பதிவு செய்த நாள்

28 அக்
2022
03:10

காரமடை: காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற்று வருகிறது.

காரமடை அருகே, மருதுார் ஊராட்சி குருந்தமலையில், குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த, 25ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை, 11:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். அதன் பின் வள்ளி, தெய்வானை சமேதராக, கல்யாண சுப்பிரமணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். அதன் பின் விநாயகர், வீரபாகு, அஸ்திரதேவர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்தனர். வரும், 29ம் தேதி காலை சக்திவேல் வழங்கும் விழாவும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு கந்த சஷ்டி மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் மலையை சுற்றி நடைபெற உள்ளது. 31ம் தேதி காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை, 3:00 மணிக்கு திருவீதி உலாவும், 5:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும், மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

குமரன்குன்று : குமரன்குன்று கோவிலில், கந்த சஷ்டி விழா நடக்கிறது. குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், 61ம் ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் துவங்கியது. காலை, 9:30 மணிக்கு, வள்ளி தெய்வானை, சமேதர கல்யாண சுப்பிரமணியசாமிக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்றும், நாளையும், காலை 9:30 மணிக்கு, அபிஷேக பூஜை நடக்கிறது. வரும், 30ம் தேதி காலை, 9:30 மணிக்கு நாம ஜெபம் நடக்கிறது. மாலை, 3:30 மணிக்கு கிரிவலம் வருதலும், சூரசம்ஹார விழாவும் நடக்கிறது, இரவு துவங்கி, மறுநாள் காலை வரை குமரன் குன்று குழுவின் பஜனை நடக்கிறது. 31ம் தேதி காலை, 8:00 மணிக்கு தெய்வானை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

ஜோதி பாலமுருகன் கோவில்: கந்த சஷ்டி விழாவையொட்டி, ஜோதிபுரம் ஜோதி பாலமுருகன் கோவிலில் இம்மாதம், 25ம் தேதி முதல், 30ம் தேதி வரை தினசரி சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாதம், 30ம் தேதி பாலமுருகன் திருக்கல்யாண நிகழ்ச்சி, திருவீதி உலா ஆகியன நடக்கின்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar