Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருமத்தம்பட்டி மாரியம்மன், ... கனகனந்தல் விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஜனையில் பங்கேற்கும் ஐ.டி. இளைஞர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2022
07:10

அன்னூர்: மொபைல், இன்டர்நெட் என, மூழ்கியுள்ள இளைஞர்கள் பலர் தற்போது பஜனையில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இளைஞர்கள் எந்நேரமும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், டிக் டாக் என மணிக்கணக்கில் மொபைலில், சமூக வலைதளங்களில் செலவழிக்கின்றனர். விளையாடுவது, நண்பர்களுடன் பேசுவது ஆகியவை குறைந்து விட்டது என பெற்றோர் கவலைப்படுகின்றனர். இந்நிலையில் அன்னூர் தாலுகாவில் ஐ.டி., நிறுவன ஊழியர்கள், ஆடிட்டர்கள், இளம் தொழிலதிபர்கள் என பலர் பஜனைகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அச்சம் பாளையம் பஜனை பாடகர் சண்முகம் கூறியதாவது : முன்பு கோவில்களில் பஜனை நடப்பது குறைவாக இருந்தது. சமீப காலங்களில் பஜனை நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. ஐ.டி. நிறுவன ஊழியர்கள், ஆடிட்டர்கள் என இளைஞர்கள் பலரும் ஆர்வமாக பஜனை பாடுவதற்கு வருகின்றனர், பஜனையின் போது பக்தி பாடலுக்கு நடனமாடவும் ஆர்வமாக வருகின்றனர். மிருதங்கம் வாசிக்க கற்றுக் கொள்கின்றனர். அன்னூர் பகுதியில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பஜனை குழுக்கள் உள்ளன. வருமான நோக்கம் இல்லாமல் பக்தி பாடல்கள் இசைப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்த குழுக்கள் செயல்படுகின்றன. எங்கு பஜனை நடத்தினாலும் குறைந்தது 50 பேர் கூடுகின்றனர். அச்சம்பாளையம் செல்வ விநாயகர் கோவில், ஓரைக்கால் பாளையம் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சனி தோறும் பஜனை நடக்கிறது. நல்லி செட்டிபாளையம் விநாயகர் கோவிலில், தேய்பிறை சதுர்த்திக்கும், செலம்பராயன்பாளையம், சிவன் கோவிலில் பவுர்ணமி தோறும் பஜனை நடக்கிறது. நள்ளிரவு வரை நடைபெறும் பஜனையில் ஆர்வமாக அமர்ந்து பக்தி பாடல்கள் பாடி நடனம் ஆடுகின்றனர். வாரத்துக்கு வாரம் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar