Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டுத்திருவிழாவில் பங்கேற்க ... சிவகங்கை பொன்னாகுளம் வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்! சிவகங்கை பொன்னாகுளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
15ம் நூற்றாண்டு கல்வெட்டு பழநி அருகே கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஆக
2012
10:08

பழநி: பழநி அருகே, 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி, வரலாற்றுத் துறை தலைவர் ரவிச்சந்திரன், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் நந்திவர்மன், பேராசிரியர் மகுடீஸ்வரன் ஆகியோர், கள்ளிமந்தையம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். கள ஆய்விற்கு பின் நந்திவர்மன், ரவிச்சந்திரன் கூறியதாவது: இரண்டரை அடி உயரமும், இரண்டடி அகலமும் உள்ள முக்கோண வடிவில் உள்ள, 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீரன் ஒருவன், வலது கையில் கொடுவாளை ஓங்கிய நிலையில் வைத்தும் நீண்ட தடியுடனும் காணப்படுகிறான். தீப்பாச்சி உடையுடன் இடுப்புப் பட்டை அணிந்து, குறுவாள் தொங்க விடப்பட்டுள்ளது. வலது பக்கம் வேட்டை நாய் வீரனுடன் ஓடி வருவது போல் செதுக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில் ஊரைக் காப்பதற்காகவும், கால்நடைகளை விலங்குகளிடம் இருந்து காப்பதற்காகவும் உயிர்நீத்த வீரர்களுக்கு, நடுகல் வைத்து வழிபடுவது வழக்கம். தற்போது கள்ளிமந்தையம் என்று அழைக்கப்படும் இந்த ஊர், முன் மந்தை (ஆடு, மாடுகள் தங்குமிடம்) யாக இருந்திருக்க வேண்டும். இவ்வீரன் இம்மந்தைகளை காவல் காத்துக் கொண்டிருக்கும் போது, ஆடுமாடுகளை கவர வந்த கூட்டத்தோடு ஏற்பட்ட சண்டையில் உயிர் இழந்திருப்பான். இவனோடிருந்த வேட்டை நாயும் கொல்லப்பட்டுள்ளது. இவ்வீரனின் நினைவை போற்றும் வகையில் நடுகல் அமைத்திருக்கலாம். இந்த நடுகல் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் யானை கட்டும் கல் ஒன்றும் நடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் மூன்றாவது வெள்ளி கிழமையை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் தெரு எண் - 09 ல் ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே நிலத்தில் 2 அடி உயர ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; அச்சிறுபாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகையில் சஞ்சீவி மலையின் அடிவாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar