Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமையான கோயில் வளாகத்தில் தேங்கும் ... செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா விமர்சை செல்வ விநாயகர் கோவில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜ சோழன் சதய விழாவில் இசைக்கப்பட்ட‘சகோட யாழ்
எழுத்தின் அளவு:
ராஜராஜ சோழன் சதய விழாவில் இசைக்கப்பட்ட‘சகோட யாழ்

பதிவு செய்த நாள்

04 நவ
2022
10:11

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், பல நுாற்றாண்டுகளுக்கு பின், மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவில், பழமையான பண்ணிசை கருவியான, சகோட யாழ் இசைக்கப்பட்டது. ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்த அப்பர், திருஞான சம்பந்தர், 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சுந்தரர் ஆகிய மூவர் பாடியது தேவாரப் பாடல்கள்.

திருவாரூர், தியாகராஜர் கோவிலில் தினமும், அந்த பாடல்களை ஓதுவா மூர்த்திகள் பாடியதை கேட்டு ரசித்த ராஜராஜ சோழன், அந்த ஏடுகளை தேடிக் கொண்டிருந்தார். அப்போது, நம்பியாண்டார் நம்பி என்பவர், தேவார ஏடுகள், தில்லையில் இருப்பதாக கூற, ராஜராஜ சோழன் தேவாரப் பாடல் ஏடுகளை மீட்க, தில்லை சென்றார்.

முழு முயற்சி: அவருடன் சென்றவர்கள், சகோட யாழ் எனப்படும் பண்ணிசைக் கருவியை இசைத்தும், அங்கிருந்த அந்தணர்களிடம் பேசியும் தேவார ஏடுகளை மீட்டெடுத்தனர். தொடர்ந்து, தஞ்சாவூர் பெரிய கோவிலில் பல நுாற்றாண்டுகளுக்கு முன் வரை, சகோட யாழ் இசைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் அந்த இசைக் கருவியானது மறைந்து போனது. பழமையான சகோட யாழ் கருவியை, ஓதுவா மூர்த்திகளின் முயற்சியால், மீட்டுருவாக்கம் செய்து நேற்று, தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடந்த ராஜராஜ சோழன் சதய விழாவின் போது, ஓதுவார்கள் இசைத்து திருவீதி உலா எடுத்துச் சென்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோவில் ஓதுவாமூர்த்தி சிவனேசன் கூறியதாவது: இந்திய அறிவியல் அமைச்சகத்தின் சார்பில், பல்வேறு ஓதுவார்களுக்கு சகோட யாழ் குறித்து விழிப்புணர்வும், அதை இசைக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து ஓதுவார்களின் முழு முயற்சியுடன் சகோட யாழ் கருவி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சகோட யாழை இசைக்க ஓதுவார்கள் முழு முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை மாத பிறப்பையொட்டி சுவாமி சுந்தரேஸ்வரரின் 64 ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை அருகே குளத்துார் குலசேகர பெருமாள், தொண்டி உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி விழாவையொட்டி ... மேலும்
 
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar