Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவதியம்மாள்புரத்தில் வெற்றி வேல் ... சிவன் கோயில் கும்பாபிஷேகம் அனுமதி கிடைப்பதில் தாமதம் சிவன் கோயில் கும்பாபிஷேகம் அனுமதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் திருடு போன சுவாமி சிலைகள் மீட்பு
எழுத்தின் அளவு:
கோவிலில் திருடு போன சுவாமி சிலைகள் மீட்பு

பதிவு செய்த நாள்

04 நவ
2022
02:11

திருவொற்றியூர், மணலியில் திருட்டு போன, 150 ஆண்டு கால ஸ்ரீதேவி - பூதேவி சிலையை மீட்ட போலீசார், திருடியவரை கைது செய்தனர்.

சென்னை, மணலி, சி.பி.சி.எல்., நகரில், 300 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீவேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை, வழக்கம் போல் பூஜைகள் செய்ய நடையை திறக்க முயன்றபோது, கோவில் இரும்பு கதவு திறந்து கிடந்தது. இது குறித்து தகவலறிந்த, மணலி காவல் ஆய்வாளர் சுந்தர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது, கோவிலினுள் இருந்த, தலா 2 அடி உயரம், 10 கிலோ எடையிலான ஸ்ரீதேவி - பூதேவி சிலைகள் மாயமானது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில், மர்ம நபர் ஒருவர், கோவிலினுள் புகுந்து சிலை திருடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சந்தேகத்தின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்ற யுவராஜ், 55, என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தன் மகள் திருமணம், 7ம் தேதி நடைபெற இருப்பதால், அதற்கு பணத்தேவை இருந்தது. அதன் காரணமாக, சுவாமி சிலைகளை திருடியதாக ஒப்புக் கொண்டார். மேலும், திருடிய சிலைகளை, மணலி, சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி பின்புறம் உள்ள மைதானத்தில் மறைத்து வைத்திருப்பதாக வாக்கு மூலம் அளித்தார். அதன்படி, மறைத்து வைத்திருந்த, 150 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி - பூதேவி சிலைகளை, போலீசார் பத்திரமாக மீட்டனர். அந்தோணிராஜ் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar