Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோயிலில் வரும் 30ல் பாலாலய ... கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கொடை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2012
10:08

திருச்செந்தூர், ஆக.28- திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் நாடார் தெரு ஸ்ரீ மாரியம்மாள் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது.திருச்செந்தூரில் சுப்பிரமணியபுரம் நாடார் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோயில் கொடை விழா கடந்த 21ம் தேதி கால்நட்டு விழா துவங்கியது. கொடைவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்பாளுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனையும், இரவு சந்தனகாப்பு தீபாராதனையும் நடந்தது. இன்று 28ம் தேதி காலை 9 மணிக்கு அம்பாளுக்கு பால்குடம் எடுத்து வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ரதவீதி வலம் வந்து காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 12 மணிக்கு வாணவேடிக்கையுடன் அம்மன் கும்பம் எடுத்து வீதிஉலா நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனையும் தொடர்ந்து 12.30 மணிக்கு அம்மன் கும்பம் எடுத்து வீதிஉலாவும் நடக்கிறது. நாளை 29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் மாலை 4 மணிக்கு மஞ்சள்நீராட்டு, 5 மணிக்கு முளைப்பாரி எடுத்து திருக்கடலில் பிரி செலுத்துதலும் நடக்கிறது. விழா நாட்களில் கோயில் கலை அரங்கில் வில்லிசை, நையாண்டி, மேளம், மெல்லிசை உட்பட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்நிர்வாக கமிட்டி தலைவர் முருகன் நாடார், செயலர் செந்தில்குமார் நாடார், துணைத் தலைவர் செந்தில் வேல்நாடார், துணை செயலாளர் செந்தில்குமார் நாடார், பொருளாளர் ஜெகன் நாடார், கணக்கர் சந்தனக்குமார் நாடார், கொடை கமிட்டி சுரேஷ் பாபு நாடார், செந்தில்குமார் நாடார், வசூலர் சித்திரைவேல் நாடார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.  சயம் என்றால் தேய்தல் என்று ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.,29) துவங்கியது. காலை ... மேலும்
 
temple news
வள்ளிமலை; வேலுார் மாவட்டம், பொன்னை அருகே அமைந்துள்ளது வள்ளிமலை. வள்ளிமலை அடிவாரம் மற்றும் மலை ... மேலும்
 
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகையையொட்டி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar