Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நூற்றாண்டு பழமையான கோவில் நிலம் ... வேலூர் வந்த ராமராஜ்ய ரதத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமியே சரணம்.. ஆரம்பித்தது அய்யப்பசாமி சீசன் .. மண்டலகாலம் துவக்கம்
எழுத்தின் அளவு:
சுவாமியே சரணம்.. ஆரம்பித்தது அய்யப்பசாமி சீசன் .. மண்டலகாலம் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 நவ
2022
03:11

சென்னை: கார்த்திகை மாதம் நடக்கும் மண்டல பூஜைக்காக சபரிமலையில் அய்யப்பன் கோயில் நடை நேற்று (நவ., 16) திறக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் குருசாமி முன்னிலையில், மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கினர்.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோயிலில், கார்த்திகை 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை ஒரு மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மண்டல காலத்துக்காக, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நேற்று மாலை 5:00 மணிக்கு நடை திறந்தார். அடுத்து, 18ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின், 18 படிகளுக்கு கீழே நின்று கொண்டிருந்த புதிய மேல்சாந்திகள் சபரிமலை ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புறம் ஹரிகரன் நம்பூதிரி ஆகியோரை கை பிடித்து அழைத்து வந்து, சன்னதி முன் அவர்களுக்கு திருநீறு வழங்கினார். மாலை 6:30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு சன்னதி முன்பு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரிக்கு அபிஷேகம் செய்து அய்யப்பன் மூலமந்திரத்தை சொல்லித் தந்து சன்னதிக்கு அழைத்துச் சென்றார். மாளிகைப்புறம் கோவில் முன்புறம் நடைபெற்ற சடங்கில் ஹரிகரன் நம்பூதிரிக்கு அபிஷேகம் நடத்தி சன்னதிக்குள் அழைத்து சென்றார்.

மண்டலகாலம் துவக்கம்: இன்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்ததும், இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் ஆரம்பமானது. தந்திரி கண்டரரு ராஜீவரரு மண்டலகால நெய் அபிஷேகத்தை துவக்கி வைத்தார். நாளை முதல், தினமும் அதிகாலை 4:30 மணி முதல் 11:30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar