Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேலூர் வந்த ராமராஜ்ய ரதத்திற்கு ... பிறந்தது கார்த்திகை மாதம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுருளி அருவியில் எழுந்த சரண கோஷம் : திரளாக பக்தர்கள் மாலை அணிந்தனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2022
04:11

கம்பம்: சுருளி அருவியில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்தனர். சரண கோஷம் விண்ணைப் பிளந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறந்திருந்தபோதும், பிரதானமாக மகரவிளக்கு, மண்டல பூஜை எனப்படும் கார்த்திகை மாதம் துவங்கி தை மாதம் நிறைவு பெறும் இரண்டறை மாதம் தான் முக்கியமானது. கார்த்திகை முதல் தேதி விரதம் துவங்கி மாலை அணிந்து, 48 நாட்கள் விரதத்தை ஐயப்பனை தரிசித்து நிறைவு செய்வார்கள். இந்தாண்டு நேற்று கார்த்திகை முதல் தேதி என்பதால் சுருளி அருவிக்கு அதிகாலை 4 மணிக்கே பக்தர்கள் வரத் துவங்கினர். அருவியில் குளித்து தங்களின் குருசாமியிடம் இங்குள்ள பூதநாராயணர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில், வேலப்பர் கோயில்களில் சிறப்பு பூஜைகளில் பங்கேற் மாலை அணிந்து கொண்டனர். அதிகாலையில் சுருளி அருவியில் எழுந்த சரண கோஷம் விண்ணைப் பிளந்தது. உத்தமபாளையம் ஞானம்மன் கோயில் படித்துறை, சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் படித்துறைகளிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர். வழக்கமாக செல்லும் பக்தர்கள் தாங்கள் அணியும் துளசி மாலையை அணிந்தனர். புதிதாக போடும் கன்னி சாமிகள் கடைகளில் துளசி மாலை, காவி மற்றும் கறுப்பு நிற உடைகளை வாங்கி அணிந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar