‘‘ததி சங்க துஷாராபம் க்ஷீரோ தார்ணவ ஸம்பவம் நமாமி சசி நம் ஸோமம் ஸம போர் மகுட பூஷணம்’’ என்னும் ஸ்லோகத்தால் சந்திரனை போற்றுகிறார் வியாசர். இதன் பொருள், ‘‘தயிர், சங்கு, பனித்துளிக்கு நிகராக வெள்ளை நிறம் கொண்ட சந்திரனே! சகல நன்மையும் தரும் சிவபெருமானின் செந்நிறச் சடையில் இருப்பவனே! உன்னைத் தலை வணங்குகிறேன்’’ என சந்திரனுக்கும், சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பை இந்த ஸ்லோகம் குறிப்பிடுகிறது. சிவனுக்கு உகந்த கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்த சந்திரன், அவரது தலையை அலங்கரிக்கும் பாக்கியத்தை அடைந்தார். இதனால் சிவனுக்கு ‘பிறைசூடி’ எனப் பெயர் வந்தது. ஜோதிட சாஸ்திரப்படி தாயாரைக் குறிக்கும் கிரகம் சந்திரன். தாயார் நலமுடன் வாழவும், அவரது உறவு பலப்படவும் இந்த விரதம் துணைசெய்யும். ஜாதகத்தில் சந்திர திசை, புத்தி நடப்பில் உள்ளவர்களும் விரதம் மேற்கொள்வர். சிவத்தலங்களில் உள்ள தீர்த்தங்களில் தம்பதியாக நீராடி சிவபெருமானை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். அக்னி பிழம்பான சிவபெருமானை குளிர்விப்பதற்காக கோயில்களில் சங்காபிேஷகம் செய்கின்றனர். அப்போது 108 அல்லது 1008 வலம்புரி சங்குகளால் அபிேஷகம் நடக்கும். அதை தரிசிப்போருக்கு சகல வரங்களும் கிடைக்கும். மனோபலம் அதிகரிக்கும். திருமண வைபவத்தில் மணமக்கள் அருந்ததியை பார்க்கும் சடங்கு நடக்கும். கற்புக்கரசியான அருந்ததியை மகரிஷியான வசிஷ்டர் மனைவியாக அடைந்தது சோமவார விரத மகிமையால் தான். இந்த விரதமிருப்போருக்கு திருமணவாழ்க்கை சிறப்பாக அமையும். விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி வில்வ இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன்பின் பகல் முழுவதும் உண்ணாமல் இருக்க வேண்டும். நவ. 25, டிசம்பர் 2,9,16 ஆகிய நாட்களில் கார்த்திகை சோமவாரம் (திங்கட்கிழமை) வருகிறது.