Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ... இடையகோட்டை மகா மாரியம்மன் கோயிலில் 10008 விளக்கு பூஜை இடையகோட்டை மகா மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கட்டிக்குளத்தில் தவ்வை உட்பட பாண்டியர் கால சிற்பங்கள்
எழுத்தின் அளவு:
கட்டிக்குளத்தில் தவ்வை உட்பட பாண்டியர் கால சிற்பங்கள்

பதிவு செய்த நாள்

09 டிச
2022
12:12

மானாமதுரை, மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் தவ்வை உட்பட முற்கால பாண்டியர் கால சிற்பங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கட்டிக்குளம் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளம் சிவக்குமார் கள ஆய்வில் அழகிய நாயகி அம்மன் கோவிலின் வளாகத்தில் தவ்வை சிற்பம் உட்பட முற்கால பாண்டியர்களின் 6 சிற்பங்களை கண்டுபிடித்தனர். அவர்கள் கூறுகையில்,இங்கு 6 சிற்பங்கள் முறையே தவ்வை, சுகாசனமூர்த்தி, பெருமாள், பிராமி, மகேஸ்வரி, இந்திராணி போன்ற முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதை பார்க்கும்போது இவ்வூரில் மிகப்பெரிய சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும்.தவ்வை என்ற இந்த சிற்பத்திற்கு மூதேவி, மூத்ததேவி, தவ்வை, தூமாவதி, சேட்டைதேவி, முகடி, காக்கைகொடியாள்,மாமுகடி, போன்ற பல பெயர்களில் குறிப்பிடுவர்.

இந்த சிற்பம் இரண்டரை அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூத்ததேவி சிற்பத்தின் வலது பக்கத்தில் மகன் மாந்தன் என்ற குளிகன் சிற்பம் இடம் பெற்றுள்ளது. மாந்தனின் தலையில் கிரீடம் தரித்தும் முகமானது மாட்டின் தலையை கொண்டும் மார்பில் முப்புரி நூலுடனும் வலது கரத்தில் ஆயுதம் ஏந்தியும் இடது கரத்தை தனது மடக்கிய இடது தொடையில் வைத்த படியும் வலது காலை கீழே தொங்கவிட்டு சுகாசன கோலத்தில் மாந்தன் சிற்பம் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது, சுகாசன மூர்த்தி என்பவர் 64 சிவ முகூர்த்தங்களில் ஒன்றாகும்.இந்த வடிவம் உமாதேவிக்கு சிவ ஆகமங்களின் பொருளை விளக்குவதற்காக தோன்றிய வடிவமாகும். கட்டிக்குளம் கிராமத்தில் மற்றுமொரு உள்ளரு பெருமாள் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிற்பம் 4அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக முற்கால பாண்டியர் காலத்தில் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது. மேலே கண்ட சிற்பங்கள் அனைத்தும் கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அழகிய நாயகி அம்மன் கோவிலில் தற்போது வழிபாட்டில் இருந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar