Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரி ஜெகன்நாதர் கோவிலில் மொபைல் ... வரசித்தி விநாயகர் கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வரசித்தி விநாயகர் கோயில் அன்னதான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாரலப்பள்ளி அருகே 2,000 ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
நாரலப்பள்ளி அருகே 2,000 ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

10 டிச
2022
11:12

கிருஷ்ணகிரி: நாரலப்பள்ளி அருகே, 2,000 ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி, நாரலப்பள்ளியிலிருந்து வேப்பனஹள்ளி சாலையில், 2 கி.மீ., தொலைவில் உள்ள கல்யாண குண்டு என்ற இடத்தில் உள்ள பாறையில், 2,000 ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த பாறை ஓவியங்கள், இறந்தவர்களின் நினைவாக வரையப்பட்டவையாகும். இறந்த மனிதர்கள் இருவரின் உருவங்கள் வரையப்பட்டு, அவர்களின் ஆன்மாவை குறிக்கும் பாண்டில் விளக்குகளும் அருகருகே வரையப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் ஒரு நிகழ்வில் இறந்ததால் வரையப்பட்டுள்ளது. மேலும், விலங்கின் மீது மனிதன் அமர்ந்துள்ள ஓவியமும் வரையப்பட்டுள்ளது. ஓவியத்தின் எல்லைகளை குறிக்கும் வகையில் குறியீடுகளும் உள்ளன. மீன் எலும்புகள் போன்று ஒரு ஓவியமும், ஒரு வட்டம் வரைந்து, பூவிதழ்கள் போன்று ஒரு ஓவியமும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், பிராமி எழுத்துக்கள் ய, ப, ம, கு போன்ற குறியீடுகளும் காணப்படுகின்றன. இக்குறியீடுகள் தமிழ் எழுத்துக்களாக இருப்பின், அவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவ்வாறு அவர் கூறினார். இதில், வரலாற்று ஆசிரியர் ரவி, சரவணகுமார், வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar