Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதுல்யநாதீஸ்வரர் கோவிலில் ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஜன., 6ல் கோலாகலம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்கள் புனரமைப்பு பணி; உபயதாரர்களுக்கு அரசு அழைப்பு
எழுத்தின் அளவு:
கோவில்கள் புனரமைப்பு பணி; உபயதாரர்களுக்கு அரசு அழைப்பு

பதிவு செய்த நாள்

04 ஜன
2023
07:01

சென்னை: தொன்மை வாய்ந்த கோவில்களை புனரமைக்கும் பணிகளில் பங்கேற்க, உபயதாரர்களுக்கு ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: தொன்மை வாய்ந்த கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில், திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இத்தகைய திருப்பணிகளில் உபயதாரர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். அதற்கான நிர்வாக அனுமதி உடனுக்குடன் வழங்கப்படும். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து, இதுவரை உபயதாரர்கள் வாயிலாக, 509 கோடி ரூபாய் மதிப்பிலான, 3,206 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. எனவே, கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள விரும்பும் உபயதாரர்கள், தங்கள் விருப்பத்தை, அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்திலோ, மண்டல இணைக் கமிஷனர் அலுவலகத்திலோ, சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களிடமோதெரிவிக்கலாம். அதன்படி, உபயதாரர்கள் விரும்பும் பணிகளுக்கான மதிப்பீடு, துறை பொறியாளர்களால் தயார் செய்யப்பட்டு, ஒப்புதல் கோரப்படும். உபயதாரர்கள் ஒப்புதல் வழங்கிய பின், துறை வாயிலாக நிர்வாக அனுமதி வழங்கப்படும். துறை மேற்பார்வையோடு, உபயதாரர் விரும்பும் நிறுவனத்தின் வாயிலாக பணிகளை மேற்கொள்ளலாம். எனவே, கோவில்கள் புனரமைக்கும் பணிகளிலும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளிலும் உபயதாரர்கள் பங்கேற்று, கோவில்கள் மேம்பாட்டுக்கு துணைபுரிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar