திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2023 08:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று துவங்கியது. கோயிலில் உற்ஸவர் தெய்வானை மட்டும் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை மூன்று முறை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்களால் அம்மனுக்கு காப்புகட்டப்பட்டு மூலிகை எண்ணெய் சாத்துப்படியாகி, அம்மன் கிரீடத்தில் கருமுடி சாத்துப்படி தங்க ஊசி மூலம் பல் துலக்குதல் மையிட்டு கண்ணாடி பார்த்த நிகழ்ச்சிகள் முடிந்து தீபாராதனை நடந்தது ஜன. 11 வரை இந்நிகழ்ச்சி நடைபெறும் அன்று பல்லக்கில் தெய்வானை அம்மன் புறப்பாடாகி ரத வீதிகளில் வீதி உலா நிகழ்ச்சியில் அருள் பாலிப்பார். திருவிழா நடைபெறும் ஐந்து நாட்களும் பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதம் வழங்கப்படும்.