பெரியகுளம்: கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. கைலாசநாதர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி, கட்டளைதாரர்கள் தியாகராஜன், கல்பனா செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.