Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனிப்பெயர்ச்சி : பரிகார ராசியும்.. ... மார்கழி மாத பூஜை நிறைவு : ஆண்டாள் தாயார், கிருஷ்ணர் திருக்கல்யாணம் மார்கழி மாத பூஜை நிறைவு : ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் விழா
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் விழா

பதிவு செய்த நாள்

17 ஜன
2023
05:01

திருவண்ணாமலை: மனிதனின் இல்லற வாழ்வில், ஊடலுக்கு பின் கூடல் என்பதை விளக்கும் வகையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் விழா நடைபெற்றது.

அருணாசலேஸ்வரர் காட்சி தர வேண்டி, பிருங்கி மகரிஷி, அருணாசலேஸ்வரரை மட்டும் நினைத்து தவமிருந்த நிலையில், அவருக்கு காட்சி தர அருணாசலேஸ்வரர் செல்ல, இதை பராசக்தி அம்மன் தடுக்க, அதையும் மீறி அருணாசலேஸ்வரர் சென்றார். இதனால் பராசக்தி அம்மன், அருணாசலேஸ்வரர் இருவரிடையே திருவூடல் ஏற்படும். இருவரையும் சமாதானம் செய்ய சுந்தரமூர்த்தி நாயனார் ஈடுபட்டு, முயற்சி தோல்வியடைந்து, பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்க அருணாசலேஸ்வரர் செல்வார். செல்லும் வழியில் குமரக்கோவிலில் தங்குவார். அப்போது வழியில் கொள்ளையர்களிடம் நகையை பறிகொடுத்து விடுவார். பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்ததால் தான், நகையை பறிகொடுத்ததாக, பராசக்தி, அருணாசலேஸ்வரரிடம் கூறுவார். பின் இருவரும் சமாதானமாகி, மறுவூடல் நடக்கும். சுவாமி நகை பறிகொடுத்ததை அறிந்த பிருங்கி மகரிஷி, தன் தவறை உணர்ந்து, அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மனை சேர்த்து வழிபட்டதாக தல புராணங்கள் கூறுகின்றன. இதை, நினைவு கூறும் வகையில், ஊடலுக்கு பின் கூடல் என்பதை விளக்கும் வகையில் ஆண்டுதோறும், திருவூடல் விழா, மறுநாள் மறுவூடல் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று திருவூடல் திருவிழா நடைபெற்றது. இன்றிரவு குமரக்கோவிலில் அருணாசலேஸ்வரர் தங்கி, கிரிவலம் சென்று, பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதை காணும் தம்பதி இடையே ஒற்றுமை பலப்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar