Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் நிதியை அறநிலையத் துறை ... கடையம் கைலாசநாதர் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம் கடையம் கைலாசநாதர் கோயிலில் யாகசாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 ஜன
2023
10:01

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மடவிளாகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சைவம் வைணவம் இணைந்த திருத்தலமாக விளங்குகிறது.

இக்கோவிலின் சிறப்பாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம் எவ்வளவு பிரசித்தி பெற்றதோ அது போல, இங்குள்ள வற்றாத தெப்பத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கலயத்தில் விபூதி வரும் அறிய நிகழ்வும் நடந்து வருவது அதிசயமான ஒன்றாகும். இந்த கோயில்கள் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் கடந்த 22ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. 23ம் தேதியன்று மங்கள இசையுடன், விகேஸ்வர பூஜை, முளைப்பாரி அழைத்து வரும் நிகழ்வும், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு முதற்கால யாக பூஜை நடைபெற்றது. இத்திருகோயில்களில் தரிசனம் செய்ய பெங்களூரு வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஹெலிகாப்டர் மூலம் காங்கேயத்துக்கு வருகை தந்தார். பின்னர் கார் மூலம் கோவிலுக்கு வந்த அவரை அவிநாசி வேத ஆகம பாடசாலை முதல்வர் சுந்தர மூர்த்தி சிவாச்சாரியார் வரவேற்றார்.

தொடர்ந்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இரண்டாம் யாக சாலை பூஜைகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவருக்கு சிவன்மலை சிவாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயணப் பெருமாள் கோயில்களில் அவர் சாமி தரிசனம் செய்தார். ரவிசங்கர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசி வழங்கினார். மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து நாளை ஆறாம் கால யாக சாலை பூஜையும் மகா தீபாராதனையும், காலை 8:15 மணிக்கு யாத்ரா தானம் கலசங்கள் புறப்பட்டு ஆலயம் வருதல், 9:00 மணிமுதல் 10:30 மணிக்குள் சிவாலய பரிவார விமான கோபுரங்களுக்கும் மூலஸ்தானத் துக்கும், பெருமாள் கோவில் பரிவார மூலஸ்தானத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது. மதியம் 12.15 மணிமுதல் 1.15 மணிவரை மகா அபிஷேகம், தீபாராதனை, பிரதாசம் வழங்கப்படுகிறது.

மாலை 5.00 மணிமுதல் 6.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறும். இதில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சிவ ஸ்ரீ சுப்பிரமண்ய சிவாச்சாரியர், ஜமீன் சமத்தூர், சிவ ஸ்ரீ சுப்பிரமண்ய சிவாச்சியர், திருச்சி திருவெள்ளரை பெரிய கோயில் மிராஸ் பட்டர் பாஞ்சராத்ர ஆகமரத்தினம் கோபாலகிருஷ்ணபட்டர், வீரசோழபுரம் பார்பதி பெரியமடம் ஒரு நான்கு வேதாந்த பண்டித குரு ஸ்வாமிகள், மடவளாகம் பார்பதி மடம் ஆதினம் ஆருத்ர கபாலீஸ்வர குரு சுவாமிகள் முன்னிலை வகித்தனர்.

சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயில் ஸ்தானீகர் சிவ ஸ்ரீ சிவசுந்தர சந்தோஷ்சிவம் யாகசாலை ஒருங்கிணைப்பு செய்திருந்தார். பிள்ளையார்பட்டி சிவநெறி கழக நிறுவனர் விகாஸ் ரத்னா சிவ ஸ்ரீ பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலய முதல்வர் சிவஸ்ரீ ராஐாபட்டர், சென்னை காளிகாம்பாள் கோயில் சண்முகசிவாச்சாரியார், இருகூர் நாகேஸ்வர சிவாச்சாரியார், ஜமீன் சமத்தூர், திருநாவுக்கரசு சிவாச்சாரியார், கோவை சிவக்குமார் சிவாச்சாரியார், ஐயர்மலை இரத்தினகுமார ஈசான சிவாச்சாரியார், கொடுமுடி சிவாகமவித்யாநிதி பிரகாஷ் சிவம் ஆகிய சிவாச்சாரியார்களும், மடவிளாகம் ராஜா பழனிசாமி குருக்கள், மணிரத்தின குருக்கள், ரங்கநாதன் பட்டர், சிவசேனாபதி பட்டர் அருண்பிரகாஷ்சிவம், வீரசோழபுரம் சரவணசிவம் ஆகிய ஸ்தானீகர்களும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். நேற்றைய நிகழ்சியில் காங்கேயம் சுற்று வட்டார ஆன்மிக பக்தர்கள், பொதுமக்கள் என பல ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டர்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு; சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலைக்கு, மலைப்பகுதி பாலகா அறக்கட்டளை சார்பில் நடப் பாண்டும் மஹா ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம் : உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை;  ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், 5 மணி நேரம் மழையில் நனைந்து, காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2024ம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு, நேற்று துவங்கியது.நாமக்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar