Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லிங்கோத்பவருக்கு தாழம்பூ வழிபாடு சாரதா ஆசிரமத்தில் குருமகாராஜ் 188 வது ஜெயந்தி விழா: சிறப்பு ஹோமம் சாரதா ஆசிரமத்தில் குருமகாராஜ் 188 வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவர்கள், சித்தர்கள் பேசிய மொழி தமிழ்
எழுத்தின் அளவு:
தேவர்கள், சித்தர்கள் பேசிய மொழி தமிழ்

பதிவு செய்த நாள்

21 பிப்
2023
05:02

சென்னை : தேவர்கள், சித்தர்கள் பேசிய மொழி தமிழ் என, புராணங்கள், வரலாறுகள், காவியங்கள், கருத்தோவியங்கள் நிரூபித்துள்ளன, என, சென்னை உயர்நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்தார். சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மையம் சார்பில், சர்வதேச தாய்மொழி தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை துவக்கி வைத்து, சென்னை உயர்நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி வள்ளிநாயகம் பேசியதாவது: மொழி என்பது புரிய வேண்டும். தமிழ் மிகச் சிறந்த மொழி. கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விஞ்ஞானத்திலும், எந்த ஞானத்திலும் சிறந்த மொழியாக இருந்து வருகிறது. உலகிலுள்ள எத்தனையோ மொழிகளை பேசி கற்றிருந்தாலும், தாய்மொழிக்கு ஈடு, இணை கிடையாது. பிற மொழிகளை பேசி சுகம் கண்டு, தாய்மொழியை மறந்து தவிக்கிறோம்.

தாய்மொழியின் பெருமையை உணர்ந்து, தினமும் ஒரு முறையாவது பேச வேண்டும் என்பதற்காகவே, இந்த சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. தேவர்கள், சித்தர்கள் பேசிய மொழி தமிழ் என, புராணங்கள், வரலாறுகள், காவியங்கள், கருத்தோவியங்கள் நிரூபித்துள்ளன. கல் தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய மூத்த மொழி தமிழ். ஒவ்வொரு துறைகளிலும் பலரால், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விஷயங்களும் தமிழர்களால் முன்பே சொல்லப்பட்டுள்ளன. டிஜிட்டல் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழ் இதிகாசங்களில் அப்போதே சொல்லப்பட்டுள்ளது. உலகில் எந்த மொழி மாறினாலும், எண்கள் மட்டும் ஒன்று முதல், ஒன்பது வரை மாறவில்லை. ராமானுஜம் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தார். எனவே, டிஜிட்டல் பிறந்தது அவ்வை மற்றும் அவரது முன்னோர் காலத்தில் தான். இதே போல, மகப்பேறு மருத்துவம், அறிவியல், உலகம் உருண்டை என பல்வேறு விஷயங்களை கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், சி.ஐ.எஸ்.ஆர்., -- எஸ்.இ. ஆர்.சி., இயக்குனர் ஆந்தவல்லி, தலைமை விஞ்ஞானிகள் பாரிவள்ளல், ராஜாசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar