Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருள் விநாயகர் கோவிலில் ... ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா 2ம் நாள் : அனுமந்த வாகனத்தில் சுவாமி உலா ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா 2ம் நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோயில்களில் மாசி பிரம்மோற்சவ விழா கோலாகமாக துவங்கியது
எழுத்தின் அளவு:
முருகன் கோயில்களில் மாசி பிரம்மோற்சவ விழா கோலாகமாக துவங்கியது

பதிவு செய்த நாள்

25 பிப்
2023
09:02

சென்னை: திருசெந்தூர், பழநி , திருத்தணி, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் மாசி பிரம்மோற்சவ விழா இன்று(பிப்.,25) துவங்கியது. கோலாகமாக துவங்கியது. இதனை முன்னிட்டு, கோயில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருசெந்தூர்: மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா தேரோட்டத்துடன் பன்னிரெண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திலும் சுவாமி அம்பாள் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். மாசி மாதம் பவுர்ணமியும் மகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளில் தேரோட்டம் நடைபெறும். இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா இன்று(பிப்.,25) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருப்போரூர் கந்தசாமி கோயில்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில், மாசி பிரம்மோற்சவ பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக, செம்பாக்கத்தில், பாலசுப்பிரமணியம் செங்குந்த மரபினர் வகையராவால், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கொடி கயிறை கொண்டு, கோயில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில், கொடி ஏற்றப்பட்டது. கோயில் வட்ட மண்டபத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. பன்னிரண்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar