திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2012 10:09
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித்திருவிழாவில் நேற்று சண்முகர் சிவப்புசாத்தி கோலத்தில் வீதிஉலா வந்தார். திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழாவில் 7ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூபதீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு உருகுசட்டசேவையும், நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர் சண்முக விலாச மண்டபத்தில் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி 7ம் திருநாள் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகமும், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து 4 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி,தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சிகொடுத்தார். சிவப்பு சாத்தியின் போது சுவாமி சண்முகரின் பின்பக்க முகம் நடராஜர் அலங்காரத்தில் சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.இன்று சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 10.30மணி முதல் 11.30 மணிக்குள் சுவாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து கோயில் சேர்கிறார்.