Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் மாசி ... திரிசக்தி அம்மன் கோவிலில் மாணவர்களுக்கு கல்வி யாகம் திரிசக்தி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2023
02:02

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோற்சவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நித்ய நான்குகால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதுதவிர கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. அந்த வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தாண்டு பிரம்மோற்சவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது. அதிகாலை 4:00 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில் உற்சவர் கந்தசுவாமி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தன. அதைத் தொடர்ந்து, பக்தர்களின் கந்தா, சரவணா, அரகரா கோஷத்துடன் அதிகாலை 5:00 மணிக்கு உற்சவ கொடி ஏற்றப்பட்டது. பின், உற்சவர் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதிதாசன், செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் வெற்றிவேல் செய்திருந்தனர். இதுபோல தாழம்பூர் ஊராட்சியில், திரிசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஞானசக்தியாக சரஸ்வதி தேவியும், இச்சா சக்தியாக லட்சுமி தேவியும், கிரியா சக்தியாக தாய் மூகாம்பிகையும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். இக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar