சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் புற்றுக் கோயிலில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2023 06:03
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் அம்பாத்துறை ரோடு தேவி கருமாரியம்மன் புற்றுக் கோயில் திருவிழா நடந்தது. மார்ச் 2ல், சிறுமலையில் இருந்து புனித நீர் அழைப்புடன் துவங்கிய விழாவில், காந்தி மைதானம் அருகே அம்மன் கரகம் பாலித்தல் நடந்தது. விழாவிற்காக விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) பூக்குழி இறங்குதல் நடந்தது. கோயில் பூசாரி நாகராஜ் குருக்கள் தலையில் அம்மன் கரகத்துடன் பூக்குழி இறங்கினார். அவரைத் தொடர்ந்து வரிசையில் காத்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், அம்மன் சரண கோஷத்துடன் இறங்கினர். பலர், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல், நீர்மோர் வினியோகம் நடந்தது.