ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் உலக நலன் வேண்டி நாளைகூட்டுப் பாராயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2023 07:03
இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் உலக நலன் வேண்டி கூட்டு பாராயணம் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
உலக நலன் வேண்டியும், தேவார திருமுறைகள் செழிக்க வேண்டியும், சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடக்க வேண்டியும். தருமை ஆதீனம் 24 வது குரு மஹா சன்னிதானம் மாசிலாமணி திருஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் நாளை ஞாயிற்றுக்கிழமை 5 ந் தேதி காலை 10:30 மணிக்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் சிவன் கோயிலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து திருஞானசம்பந்தர் பாடிய திருஎழுகூற்றிருக்கை என்னும் தேவார பதிகத்தை எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடும் கூட்டுப் பாராயணம் வழிபாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இளையான்குடி மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தார் செய்து வருகின்றனர்.