Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் ... அவிநாசி புற்று மாகாளியம்மன் பொங்கல் சாட்டு விழா அவிநாசி புற்று மாகாளியம்மன் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் மாசித் திருவிழா: மலர் கேடய சப்பரத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் மாசித் திருவிழா: மலர் கேடய சப்பரத்தில் சுவாமி உலா

பதிவு செய்த நாள்

09 மார்
2023
11:03

திருச்செந்தூர்: திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா 11ம் திருவிழாவான நேற்று, முன் தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது.

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசித் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் தினமும் காலை மற்றும் இரவு, சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி ரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. 11ம் திருவிழாவான நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு சிவன் கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் தனிதனிச் சப்பரத்தில் எழுந்தருளி யாதவர் மண்டகப்படி சென்றனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7:00 மணிக்கு சுவாமி, அம்பாள் புஷ்ப ரத்தில் யாதவ மண்டகப்படியிலிருந்து எழுந்தருளி , வெளி வீதி வழியாக தெப்பக்குளத்தில் உள்ள திருநெல்வேலி ரத்தார் மண்டகப்படி சென்றார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 11:00 மணிக்கு, தெப்பத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளியதும் தெப்ப உற்சவம் துவங்கியது. தெப்பத்தில் 11 முறை வலம் வந்து சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் 12ம் திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை 4:30 மணிக்கு சுவாமி , அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்தில் 8 வீதிகளில் உலா வந்து, 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சென்றனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுவாமி. அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தார். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் , இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar