Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ... குருவாயூர் கோவில் தரிசனம் செய்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜமாரியம்மன், வனபத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2023
10:03

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஊராட்சி ஒன்னிபாளையம் ராஜமாரியம்மன், வனபத்திரகாளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இம்மாதம், 24ம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்மாதம், 22ம் தேதி காலை, 9:00 மணிக்கு மங்கல இசை, விநாயகர் வழிபாடு, நவகிரக கலச பூஜை, தன பூஜை, தீபாராதனை நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு ஒன்னிபாளையம் செல்வ விநாயகர் திருக்கோவிலில் இருந்து முளைப்பாலிகை ஊர்வலம், விமான கோபுர கலசம், தீர்த்த குடம் கொண்டு வருதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜை துவங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 23ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை பகல், 11:00 மணிக்கு ராஜமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு யந்தர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமங்கள், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை துவங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

இம்மாதம், 24ம் தேதி காலை, 4:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, தொடர்ந்து நாடி சந்தானம், யாத்ரா தானம், புண்ணிய குடங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு மூலவர் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு மகா அபிஷேகம், தச தரிசனம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு மேல் அன்னதானம் இரவு, 7:00 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவை தொடர்ந்து, 12 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டியார் ஒன்னிபாளையம், ஒன்னிபாளையம் புதூர், கரிச்சிபாளையம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar