ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி யுகாதி விழா நடந்தது. இதனை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி மற்றும் 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். அங்கு யுகாதி விழா சிறப்பு பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். பின்னர் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடந்தது. அதன் பின் தீர்த்தம், சடாரி ஆசிர்வாதம், கோஷ்டி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் செய்தனர்.