காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்ன் கோயில் திருவிழா இன்று புதன்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.இதற்காக ஸ்ரீ காளஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் மதுசூதன் ரெட்டி முத்தியாலம்மனுக்கு பாரே (சீர் வரிசை பொருட்களை வழங்கினார். முதலில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு மற்றும் தேவஸ்தான நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினரை சிறப்பு வரவேற்பு செய்தனர்.சாமி தரிசனம் செய்தவர் முன்னதாக சிவன் கோயில் சார்பில் சீர் வரிசை பொருட்களை வழங்கினார். முத்தியாலம்மன் திரு விழாவையொட்டி பக்தர்கள் காலை முதல் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர் அதிகாலை முதலே முத்தியாலம்மன் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு சேவல் மற்றும் ஆடுகள் பலி கொடுத்து தங்களின் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இன்று கோயில் சார்பில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிவன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுனிதா ராமபிரபா, லட்சுமி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்ரீதேவி ஸ்வர்ண மூர்த்தி, கன்டா.உதய், பகடால ராஜு, கணேஷ், சென்னேறு குப்பம் சேகர். ஹரி நாயுடு, குமாரசாமி, மணி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.