அவிநாசி: அவிநாசி கங்கவர் வீதியில் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு நேற்று காப்பு கட்டு, நந்தா தீபம் ஏற்றுதல், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து படைக்கலம் எடுத்து வரும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தன. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ அழகு நாச்சியம்மன் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.