Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடிப்பள்ளம் பாலமுருகன் கோவிலில் ... மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் மின் அலங்கார தேரில் வலம் வந்த முத்தாலம்மன்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் மின் அலங்கார தேரில் வலம் வந்த முத்தாலம்மன்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2023
11:04

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் அம்மன் மின் அலங்கார தேரில் வலம் வந்தார். மேலும் காலை முதல் இரவு வரை பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக்கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 28 அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 ம் திருநாள் மண்டகப்படியாக குதிரை வாகனத்தில் அம்மன் அருள் பாலித்தார். நேற்று காலை 9:00 மணி தொடங்கி பல்வேறு அமைப்பினர் சார்பில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் இரவு 8:00 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன் மின் அலங்கார தேரில் எழுந்தருளினார். அப்போது தீவட்டிகள் வெளிச்சத்தில், வான வேடிக்கைகள், மேள தாளம் முழங்க, நான்கு மாட வீதிகளில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ஆடி அசைந்து வந்தது. தொடர்ந்து ஓம் சக்தி, பராசக்தி" கோசம் விண்ணை முட்டியது. ஒரு மணி நேரம் வரை தேரோட்டம் நடந்த நிலையில், மீண்டும் அம்மன் தேர் நிலையை அடைந்தார். அப்போது பக்தர்கள் அம்மனை சுமந்து ஆடி அசைந்தபடி கோயிலை அடைந்தனர். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிர வைசியர் சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் எட்டாவது நாள் வரும் அஷ்டமியை, ‘துர்காஷ்டமி’ என்கிறோம். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி, களிமண்குண்டு, தினைக்குளம், பெரியபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar