பதிவு செய்த நாள்
06
ஏப்
2023
04:04
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
குஜிலியம்பாறை ஒன்றியம், பாளையம் பேரூராட்சி ராமகிரியில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். மார்ச் 29 அன்று கொடியேற்றத்துடன் துவங்கிய கோயில் விழாவில், தொடர்ந்து மண்டகப்படி சிறப்பு பூஜைகளும், 4.4.23 அன்று திருக்கல்யாணமும் நடந்தது. 5.4.23 அன்று சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, இன்று 6.4.23 தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளுடன் கமலாவல்லி தாயாரும் கோவிலை வலம் வந்து சன்னதியை அடைந்தனர். தேரோட்டத்தில் குஜிலியம்பாறை, பாளையம், ராமகிரி, ஆர்.கோம்பை, கோவிலூர், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். கோயில் செயல் அலுவலர் முருகன், அர்ச்சகர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.