பதிவு செய்த நாள்
07
ஏப்
2023
10:04
அவிநாசி: அவிநாசி அடுத்த ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவில்,நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் மாவிளக்கு எடுத்தும்,பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.
அவிநாசி, ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில்,நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர் .அதனைத் தொடர்ந்து, மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, கம்பம் பிடுங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக, கடந்த மாதம் 28ம் தேதி பொட்டுசாமி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. அதன் பின்னர் 30ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சிறப்பு அபிஷேகம், கம்பம் சுற்றி ஆடுதல் நடைபெற்றது. இன்று, மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவையொட்டி,ஊர் பொதுமக்கள் மற்றும் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.